துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிப்பதில் சிக்கல்...

சென்னை: துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனுவை பரிசீலிப்பதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மனுதாக்கல் செய்துள்ளார். அதே பெயரை கொண்ட ஒரு சுயேச்சை வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட துறைமுக தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்காரணமாக இரு வேட்பாளர்களில் யாரின் வேட்பு மனுவை ஏற்பது என்பதில் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுகம் தொகுதியில் ஒரே பெயரை கொண்ட இரு வேட்பாளர்களின் பெயர்களையும் அரசு கெஜட்டில் சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. பின்னர் இரு வேட்பாளர்களின் பெயர்களை சரிபார்த்த பிறகு நாளை காலை 11 மணிக்கு முடிவானது அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: