உத்திரமேரூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. உத்திரமேரூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல் வரவேற்றார். உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமாக க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அதிமுகவின் மக்கள் விரோதப் போக்கை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து, திமுக வெற்றி பெற, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எம்பி செல்வம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், காளிதாஸ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: