மதுரை: அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு ெபறும் வயதை 60 ஆக உயர்த்தி கடந்த பிப். 25ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும்.