கருணாநிதி எப்போதும் முதல்வராக வர முடியாது: திண்டுக்கல் சீனிவாசன் பாணியில் ஓபிஎஸ் உளறல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஓபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  ‘‘கருணாநிதிக்கு ஒரே ஆசை, முதல்வராக வர வேண்டும் என்று, அவர் முதல்வராக முடியவே முடியாது. தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக முடியவே முடியாது” என்று பேசினார். அவர் பேசியது அதிமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அதிமுகவினர் ஓபிஎஸ் தவறாக பேசியதை சுட்டிக்காட்டியதும் சுதாரித்து கொண்டு, ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது என சமாளித்தார்.

அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழக்கமாக உளறி கொட்டுவது வாடிக்கை. அந்த வரிசையில் உளறல் அமைச்சர்கள் பட்டியலில் தற்போது ஓபிஎஸ்சும் இணைந்து விட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories: