பெரியகுளம் : பெரியகுளத்தில் உள்ள கக்ரியாகுளத்தில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. தொழில் போட்டியில் தண்ணீரில் பூச்சி மருந்தை கலந்ததாக, குத்தகை எடுத்தவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள கக்ரியாகுளத்தை அன்னபிரகாசம் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அதில் மீன் வளர்த்து வந்தார். நேற்று மாலை முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின. இதைப் பார்த்த குத்தகைதாரர் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீரை முகர்ந்து பார்த்தபோது, அதில் பூச்சி மருந்து தெளித்திருப்பது தெரிய வந்தது.