தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது பெரிச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). விவசாய தொழிலாளி. இவரது நண்பர்கள் யோகேஸ்வரன், விவேகானந்தன், வசந்த். இவர்கள் நேற்று மாலை தங்களது குடியிருப்பு பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் ஒருவருக்கு வாக்கு கேட்டு வேனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த வேனில் இருந்து கிராம மக்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை விநியோகித்தாக கூறப்படுகிறது. மணிகண்டன் உட்பட 4 பேருக்கும் அதிமுகவினர் மது வழங்கினர்.