வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலில் அவதி: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்..மாணவர்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையொட்டி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, அரசுப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆகியவை உள்ளன. இங்குள்ள தனியார் கல்லூரிக்கு மாமல்லபுரம், கல்பாக்கம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்  அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்து செல்கின்றனர். மேலும், சுற்றுவட்டார கிராம பொதுபொதுமக்களும் வேலைக்கு செல்வதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும் தினமும் வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில், பூஞ்சேரி இசிஆரில் இருந்து மாமல்லபுரத்திற்கு பிரிந்து செல்லும் இடத்தில் பஸ் நிறுத்தம்  இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரி  மாணவர்கள், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: