அமைச்சர் வேலுமணி ரூ.2 லட்சம் கோடி ஊழல்: ராஜவர்மன் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் அமமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாத்தூர் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ரூ.2 லட்சம் கோடியை உள்ளாட்சி துறையில் ஊழல் செய்து சம்பாதித்து உள்ளார். அவரால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அமைச்சர்  வேலுமணியால் அதிமுக ஆட்சியை இழக்க போகிறது.

என்னுடைய சொத்து மதிப்பை ஆய்வு செய்து பாருங்கள். அதிக சொத்து வைத்திருந்தால் அத்தனை சொத்துக்களையும் எழுதி தருகிறேன்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்குமே கட்சி மற்றும் ஆட்சியை அமைப்பதற்கு தகுதி இல்லை’’ என்றார்.

Related Stories: