டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நகரங்களை போல சிறுநகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அதிகரிப்பு பற்றிய மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக மோடி தகவல் அளித்துள்ளார்.
