சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மதிமுக-வின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் முக்கிய அம்சமான ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை உறுதி அளிக்கும் விதமாக தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக-வின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். தமிழ்நாடு சனாதனத்திற்கு எதிரான பெரியார் மண் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் உரையாடினார்.