சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வளசரவாக்கம் ஜானகி நகரை சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன் புகார் ஒன்று அளித்தார். அதில், பிரபல திரைப்பட நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் (32), நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். இவர், கடந்த 2013ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார். எனது தொழில் வளர்ச்சி அடையும் எனக் கூறி ‘ரைஸ் புல்லிங்’ என்ற இரிடியம் கலந்த கோயில் கலசம் இருப்பதாக கூறினார். அதை அலுவலகத்தில் வைத்து பூஜை செய்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்றார். அதற்கு விலையாக 30 கோடி கேட்டார். பின்னர் படிப்படியாக குறைத்து உங்களுக்காக 26 கோடிக்கு இரிடியம் கலந்த ‘ரைஸ் புல்லிங்’ தருவதாக கூறினார். அதன்படி நான் அம்ரிஷிடம் ₹26 கோடி பணம் கொடுத்தேன். அவரும் எனக்கு இரிடியம் கலந்த ரைஸ்புல்லிங் கொடுத்தார். சில நாட்கள் கழித்து அதை சோதனை செய்த போது அது போலி என ெதரியவந்தது.