எட்டயபுரம் : கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிய கன்டெய்னர் லாரி சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள நற்கலைகோட்டையை சேர்ந்த அய்யாச்சாமி மகன் பால்ராஜ் (28) ஓட்டினார். எட்டயபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த டிவி, உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, மொபட், சைக்கிள் என மூன்று வாகனங்கள் நொறுங்கின. எட்டயபுரத்தை சேர்ந்த காதர் (28) என்பவர் ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விட்டு டீக்குடிக்க சென்றதால் அவர் தப்பினார்.