சென்னை: அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த புதிய தமிழகம் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ள 60 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சென்னையில் நேற்று வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கிருஷ்ணசாமி பேசியதாவது: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டப்பட்டது. இதில், 60 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும். சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.