சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக நிலைப்பாடு அதிமுக ஏற்பு: ராமதாஸ் பாராட்டு

சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விஷயத்தில், பாமக நிலைப்பாட்டை அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்றுக்கொண்டதற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் விரைவில் தாக்கல் செய்யவிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பாமகவின் நிலைப்பாட்டை, அதிமுக அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது தமிழகம் முழுமையான சமூகநீதி வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியிருப்பதையே  காட்டுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் முழுமையான சமூகநீதியை மலரச் செய்வதற்கு அதிமுக முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாமக கொள்கை.  அதிமுகவும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: