திருச்சி : ஓயாமரி சுடுகாடு எதிரே காவிரிக்கரையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, தார்சாலை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி - ஸ்ரீரங்கம் காவிரி கரையில் ஓயாமரி சுடுகாடு அமைந்துள்ளது. சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காவிரி பாலத்திலிருந்து ஓயாமரி சுடுகாடு வழியாக சென்னை பைபாஸ் சாலை செல்ல பாலத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் காவிரி ஆற்றின் கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புசுவர் அமைக்கப்பட உள்ளது.