கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை ஓராண்டுக்கு பின்னர் விரைவு ரயிலாக இயக்கப்பட்டது. கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டதால் குறைந்த அளவிலான பயணிகளே விரைவு ரயிலில் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம் - கோவை மார்க்கத்தில் தினசரி காலையில் இயக்கப்படும் பயணிகள் ரயில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகளின் கோரிக்கையின் பேரில் பயணிகள் ரயில் சேவையானது விரைவு ரயில் சேவையாக மாற்றி காலை மற்றும் மாலையில் என இரு மார்க்கத்திலும் இயக்க முடிவு செய்யப்பட்டது.