ரத்தக்குழாயில் அடைப்பு பிரச்சனை:டென்மார்க், ஆஸ்திரியாவைத் தொடர்ந்து நெதர்லாந்திலும் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தை பயன்படுத்த தடை

நெதர்லாந்து : அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மார்ச் 28 வரை நெதர்லாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் 200-க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்ப்பட்டு உள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை செலுத்திக் கொள்வதால் பக்கவிளைவு ஏற்படுவது தெரியவந்தது.பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். இவை வழக்கமானதுதான்.ஆனால் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான நர்ஸ் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் பலியானர்.இதையடுத்து, அந்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா நிறுத்திக் கொண்டது. இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன. டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரித்த தடுப்பூசி போட்ட சிலருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு பிரச்சனை ஏற்பட்டதால் நெதர்லாந்து அரசும் அந்த தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த  2 வாரத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.

Related Stories: