மதுராந்தகம், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்கள் அறிமுகம்

மதுராந்தகம், மார்ச் 15: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர் 4 சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. திமுக எம்பி செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.ஏ.சேகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் வளையாபதி, பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மேகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அல்லா பாக்ஸ், மமக மாவட்ட தலைவர் ஷாஜகான் உள்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மல்லை சத்யா ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள், தங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டணி நிர்வாகிகளை கேட்டு கொண்டனர்.

Related Stories: