தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் டெக் மஹிந்திரா நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அதில், கல்லூரி நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு செயல் அலுவலர் விஜயராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ரம்யா வரவேற்றார்.

வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி இளங்கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, டெக் மஹிந்திரா நிறுவன பணியில் சேர்வதற்கான ஆணையை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் ஆண்டனி வாலன், உதவிப் பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: