மணப்பாறை: மணப்பாறை அருகே காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாயில், உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணா ணது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம்.குளித்தலை அடுத்த மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து எடுக்கப்படும் காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2 மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் துருபிடித்து பழுதாகி இருந்த காரணத்தால் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வந்த குடிநீர் சுமார் 10 அடி தூரத்திற்கு நாலாபக்கமும் பீறிட்டு அடித்தது.