குளித்தலை : கரூர் மாவட்டம் அய்யர்மலை அரசு கலை கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய பேரணி நடைபெற்றது.
இதில் கட்டாயம் அனைவரும் ஜனநாயக கடமையில் ஒன்றான தேர்தல் அன்று வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடிகளுக்கு செல்லும்பொழுது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கிருமிநாசினி தெளித்துக் கொண்டு வாக்கு சாவடி மையத்துக்கு செல்ல வேண்டும் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.