சென்னை: கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து தேர்வு அட்டவணையும் வெளியிட்டுவிட்டது. முன் பருவத் தேர்வுகள் தற்போது நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 16 முதல் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகளை நடத்துவதற்காக முதன்மைக் கண்காணிப்பாளர்கள், புறத் தேர்வர்களை வேறு பள்ளிகளின் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள வேண்டும், உதவியாளர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர்கள் ஆகியோரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.