மைசூரு: மஜதவில் மேலிடம் என்று எதுவும் கிடையாது. அனைவரும் மேலிடத்தை போல் உள்ளனர் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். மகாசிவராத்திரியை முன்னிட்டு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்ட முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது: ``மாவட்ட கூட்டுறவு தேர்தலில் நான் எப்போதும் போட்டியிட்டது கிடையாது. சகோதரர் எச்.டி.ரேவண்ணா அதிகமாக போட்டியிட்டுள்ளார். ஆனால் மைசூரு மைமுலுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்துக்காக நானே 2 நாட்கள் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். மஜதவிலிருந்து அதிகமானவர்கள் வெளியே சென்று வருகின்றனர் இதை தடுக்க கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.