அரக்கோணம்: பிரதமர் மோடி முகத்தில் தாடி வளருமே தவிர தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை தரமான இலவச கல்வி, மருத்துவம் வழங்கப்படும் என அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசி வருகிறார். வரும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மார்ச் 14-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.