பிரதமர் மோடி முகத்தில் தாடி வளருமே தவிர தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: அரக்கோணத்தில் சீமான் தேர்தல் பரப்புரை

அரக்கோணம்: பிரதமர் மோடி முகத்தில் தாடி வளருமே தவிர தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை தரமான இலவச கல்வி, மருத்துவம் வழங்கப்படும் என அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசி வருகிறார். வரும் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மார்ச் 14-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் கடந்த 7-ம் தேதி ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்தினார். உடனடியாக தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தையும் தொடங்கினார். மேலும் திருவெற்றியூர் தொகுதியில் கடந்த 12 நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்ககொண்டார். இன்று அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், மாலை 4 மணி முதல் அணைக்கட்டு, கீழ்வைத்தியனாங் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

Related Stories: