திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை தாக்கப்பட்ட பின் முதன்முறையாக பூஜையில் பங்கேற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா கடந்த சில நாட்களுக்கு தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களால் கடுமையாக தாக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் முகாம் முடிந்து ஆண்டாள் கோயில் வந்த யானைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கமாக தங்கும் நிலையத்தில் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அங்கு யானையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாவட்ட கலெக்டர், கோயில் இணை ஆணையர் யானையின் நிலையை நேரில் வந்து பார்த்து விட்டு சென்றனர்.