வீரபாண்டி தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கும் விஜயலட்சுமி பழனிசாமி: அதிமுகவில் சீட் வழங்காததால் தடாலடி

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் சீட் ஒதுக்காததால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி சுயேச்சையாக களம் இறங்க திட்டமிட்டுள்ளார். 1983ம்ஆண்டு எம்ஜிஆர் அமைச்சரவையிலும், 2006ம்ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் விஜயலட்சுமி பழனிசாமி. சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் வீரபாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தொண்டர்கள் வீட்டில் குவிந்தனர். சீட் கொடுக்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அவர், ‘‘வீரபாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் வழங்கவில்லை. உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்டுள்ளனர். எனவே வேட்பாளர் அறிவிப்பில் தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி முடிவு செய்வோம்’’ என்றார்.

Related Stories: