சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று முதன் முதலாக ஜி.கே.வாசன் தான் அறிவித்தார். அன்றிலிருந்து அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார். முதல் முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக தொடர்ந்து பேசிவந்தது. இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது.