பந்தலூர்: பந்தலூர் நெல்லியாளம் வாளவயல் பகுதியில் நீரோடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பந்தலூர் அருகே நெல்லியாளம் வாளவயல் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி வழியாக ஓடும் நீரோடை பொன்னானி ஆற்றில் கலக்கிறது. மழை காலங்களில் வாளவயல் பகுதியில் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்குவதால் அப்பகுதி மக்கள் நீரோடையை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது நெல்லியாளம் வாளவயல் பகுதியில் பொக்லைன் மூலம் நீரோடையை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.