பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதியை ஆரம்பம் முதலே பாஜ கேட்டு பிடிவாதம் செய்து வருகிறது. வேல் யாத்திரை, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பழநி தொகுதி தங்களுக்குத்தான் என்ற உறுதிக் குரல்கள் பாஜ நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டதால் அதிமுகவினர் அப்செட்டாகினர். இதனால் அதிமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர். பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாத நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான மின்மோட்டார் சுவரில் பாஜ சார்பில் மோடி மற்றும் பாஜ நிர்வாகிகள் படம் பொறிக்கப்பட்ட போஸ்டரை பாஜவினர் ஒட்டி உள்ளனர்.