கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கத்தாழைமேடு என்ற இடத்தில் பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைக்கப்பட்டுள்ளது. பெரியார் நினைவு சம்த்துபுர நுழைவு வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.