சின்னசேலம்: கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மேற்பார்வையில் கரியாலூர் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் எழுத்தூர், எட்டரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாராய ரெய்டு செய்தனர். அப்போது, எட்டரைப்பட்டி கிராம ஓடையில் சுப்பிரமணியன் என்பவர் சாராயம் காய்ச்ச சுமார் 10 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரவிக்குமார் எஸ்ஐ மற்றும் போலீசார், பேரல்களை சேதப்படுத்தி சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.