பாஜ என்னை பயன்படுத்தாவிட்டால் இழப்பு எனக்கில்லை: எஸ்.வி.சேகர் உர்ர்ர்....

பா.ஜ. என்னை பயன்படுத்தி கொள்ளாவிட்டால்,  இழப்பு எனக்கு இல்லை என்று கோபியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான எஸ்.வி.சேகர் வந்தார். அவர் நிருபர்களிடம்  கூறியதாவது: இந்த முறை பாஜ - அ.தி.மு.க. கூட்டணியில் பிரசாரத்திற்கு  என்னை அழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜ என்னை பயன்படுத்திக்  கொள்ளாவிட்டால், இழப்பு எனக்கு இல்லை. என்னை பயன்படுத்திக்கொள்பவர்கள்  புத்திசாலிகள். சசிகலாவை ஒன்றரை சீட்டுக்கு நிற்கும் சரத்குமார்,  சீமான் போன்றோர்தான் சந்தித்து உள்ளனர். சீமான் எல்லாம் என்றைக்குமே  ஆட்சிக்கு வர முடியாது. டி.டி.வி. தினகரனை நம்பிபோன 18  எம்.எல்.ஏ.க்கள் நிலை என்ன ஆனது?. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: