சிக்கமகளூரு: பதவியேற்று ஒரு வாரமாகியும் புதிய கலெக்டர் வந்துள்ளது பற்றி எனக்கு இதுவரை தெரியாது என்று மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ குமாரசாமி கூறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி பாஜ எம்.எல்.ஏவாக இருப்பவர் குமாரசாமி. இவர் சிக்கமகளூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் மாவட்டத்தில் மழை பாதிப்பு பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படாமல் உள்ளதை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ குமாரசாமி சிக்கமகளூருவுக்கு புதிய மாவட்ட கலெக்டர் இன்னும் வரவில்லை. புதிய கலெக்டர் வந்தவுடன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.