கீழ்பவானி: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கான்கிரீட் தளம் அமைத்தால் நீர் தடைபட்டு பாசனம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ. 934 கோடி மதிப்பிலான கால்வாய் திட்டத்தை நேற்று முன்தினம் பிரதமர் கோவையில் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.