நெல்லை நமக்குதான்... அதிமுக-பாஜ குஸ்தி

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் போட்டியிட்டு வந்த நெல்லை சட்டசபை தொகுதியை பாஜ தங்களுக்கு ஒதுக்கக் கேட்டு வருகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட மாஜி அமைச்சர் நயினாரு தயாராகி வருகிறார். தொகுதியில் தங்கள் பலத்தை காட்ட சில நாட்களுக்கு முன்பு தமிழ்க் கடவுள் பெயரைக் கொண்ட மாநில தலைவரை அழைத்து மெகா பைக் பேரணி நடத்திக் காட்டினார். தேர்தல் அலுவலகம் திறப்பதற்காக ஹோமமும் நடத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு தள்ளிப் போடப்பட்டது. இந்த அளவுக்கு பாஜ நெல்லையில் தொகுதியில் வேகம் எடுப்பது இலை கட்சியினர் மத்தியில் புளியை கரைத்துள்ளது.

பாஜ பைக் பேரணி தொடங்கிய அதே தச்சநல்லூரில் அதிமுக ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்காக பொதுக்கூட்டம் போட்டது.  கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே தொண்டர்கள் சிலர், ‘நெல்லை தொகுதியில் நாம தான் போட்டியிடணும்’ என கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர். இதை மேடையில் இருந்து நிர்வாகிகளும் கண்டு ரசித்தனர். பின், அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசுகையில், ‘கூட்டணி கட்சிக்குள் சதுரங்க விளையாட்டுகள் நடப்பது வழக்கம் தான். எதிலும் அவசரம் காட்டக் கூடாது’ என்றார்.

Related Stories: