நீங்க தான் நிக்கணும் எங்களுக்கும் ஒதுக்கணும்

மாங்கனி மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட சீட் கேட்டு இலை கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மாஜி எம்எல்ஏக்கள், ஏற்கனவே நின்று தோற்றவர்கள், பகுதி செயலாளர்கள் என்று எல்லா தரப்புமே முட்டி மோதுதாம். இதில் முதல்வர் மாவட்டம் என்பதால் சிட்டிங் எம்எல்ஏக்கள் அனைவரும் நூதன டெக்னிக் ஒன்றை கடைபிடிக்கிறாங்களாம். பத்து தொகுதிகள் தற்போது அதிமுக வசம் உள்ளது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருக்காங்க. அதாவது, ‘‘எங்க தொகுதியில் சி.எம்.போட்டி போடணும். அதே நேரத்தில் எங்களுக்கும் அந்த தொகுதியை ஒதுக்கணும் என்பது  போல் அந்த விருப்பமனுக்கள் இருக்காம். தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏ சக்திவேல், மேற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏ வெங்கடாஜலம், பகுதி செயலாளர் யாதவமூர்த்தி, கடந்த தேர்தலில் வடக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சரவணன், ஜெ.பேரவை ஜினோத்குமார் என்று இந்த பட்டியல் நீண்டுகிட்டே போகுதாம். அது சரி, இவங்களுக்கு சீட் கிடைக்கணும் என்றால் 234 தொகுதிகளிலும் கூட, சி.எம்.போட்டி போடணும் என்று விருப்பமனு குடுப்பாங்க. சம்பாத்தியம் அப்படி. எதுவுமே இல்லாத நாங்க எப்படி விருப்ப மனு போட்டு பணம் கட்ட முடியும்? என்பது அப்பாவி ெதாண்டனின் குமுறலாக இருக்கிறது.

Related Stories: