பலனில்லாத பட்டா...!லாரன்ஸ், காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான இருளர் குடும்பங்கள் உள்ளன. அவர்கள், ஏரிக்கரை, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பில்லாமல் வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு விண்ணப்பித்தால் இழுத்தடித்து வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே அவர்களிடம் உள்ளது. முறையான வசிப்பிடம் இல்லாததால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் அதிகாரிகள் துணையுடன் பட்டா வாங்கி விடுகின்றனர். மேலும் சில இடங்களில் அமைச்சர் வருகை உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் அவசர கதியில் பழங்குடியினருக்கு கணக்கிற்காக பட்டா வழங்கி விடுகின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் இடத்தை அளந்து விடாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பட்டா கொடுத்தும் பயனில்லாத தான் நிலை உள்ளது.

Related Stories: