கோவை: கறிவேப்பிலை விலை உயர்வை கண்டித்து கோவையில் கறிவேப்பிலையுடன் செல்பி எடுத்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. தவிர, காய்கறிகளின் விலை ஏறு முகத்தில் இருக்கிறது. இந்நிலையில், காய்கறி வாங்கினால் இலவசமாக கடைகளில் தரப்படும் கறிவேப்பிலை தற்போது கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கறிவேப்பிலை விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால், கடைகளில் இலவசமாக கறிவேப்பிலை அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கடும் விலை உயர்வால் இல்லதரசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.