புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் 92.59-க்கும், டீசல் விலை லிட்டர் 85.98க்கும் விற்பனையாகிறது. ராஜஸ்தான், மபி.யில் பெட்ரோலின் விலை செஞ்சுரி அடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 90க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இருந்து பெட்ரோல் கடத்தி வரப்பட்டு, உள்ளூர் பெட்ரோல் பங்க்குகளைக் காட்டிலும் லிட்டருக்கு ₹ 22 குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்றால் மக்கள் விடுவார்களா? இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்படும் பெட்ரோல் சாலை ஓரங்களில் டேங்கர் மூலம் விற்கப்படுவதால், பெட்ரோல் பங்க்குகளின் விற்பனையில் நாளொன்று 1,200 முதல் 1,800 லிட்டர் வரை குறைந்துள்ளது,’’ என தெரிவித்தனர்.