திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு மேலும் கொரோனா தடுப்பூசிகள் கோரி சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை இழந்த சுகாதார ஊழியர்களுக்கு பதிவுசெய்ய மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் 3வது முன்னுரிமை பெறும் முதியவர்களுக்கு போட கேரளாவுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்துள்ளனர்.