1996க்கு பின்னர் குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜ வென்றது இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சீட் பெறுவதிலும், போட்டியிடுவதிலும் ஆர்வம் காட்டினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குகளை பெற முடியாத நிலை உள்ளது. பாஜவால் குமரியில் சட்டமன்ற தேர்தலில் கால் ஊன்ற முடியாத நிலை தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாமல் போவதற்கு கட்சி தலைவர்கள் சிலரது நடவடிக்கைகள் காரணம் என்று கட்சி தொண்டர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, பாஜ தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்கப்படுவதாக கூறி பாஜ கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர். சுய நல தலைவர்களால் பாஜ வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள குமரியின் நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்குகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.