மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற விவகாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சிறை நிர்வாகத்திடம் தமிழக சிறையில் உள்ள பேரறிவாளன் தரப்பில் கோரப்பட்டது. இந்த தகவல்களை பெற முடியாததால், மும்பை உயர் நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பு நாடியது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.