15 கிலோ பிளாஸ்டிக், குட்கா பறிமுதல்-3 கடை உரிமையாளர்களுக்கு ₹6 ஆயிரம் அபராதம்

வேலூர் : வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நாகேஸ்வரன், ராஜேஷ் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டி டம்ளர்கள், கப்புகள், 500 கிராம் குட்கா பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை வைத்திருந்த 3 கடை உரிமையாளர்களுக்கு தலா ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: