ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வௌியிட்ட அறிக்கை: ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய பாஜ அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அரசை கண்டித்தும், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், நாளை மறுநாள் (22ம்தேதி) காலை 9 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, கண்டன உரையாற்றுகிறார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார். திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை, வார்டு, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த முன்னோடிகள், தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.