சென்னை :செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் செயல் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்வாதி மோகனுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.அமெரிக்காவின் இந்த வரலாற்று மிக்க பெர்சிவரன்ஸ் விண்கல ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஸ்வாதி மோகனுக்கு முக்கிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தை நாசா 2013ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே அதில் ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி மோகன், ஆய்வு பாகம் தயாரிப்பின் வழிக்காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக ஸ்வாதி மோகன் செயல்பட்டார்.