மண்டியா: சூரியன் திசை மாறும் தினத்தை ரதசப்தமி தினம் என்று இந்துக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள். இந்நாளில் நதியில் மூழ்கி நீராடி பின் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கஷியப்பா மகரிஷி-அதிதிதேவி ஆகியோரின் மகனாக சூரிய பகவான் பிறந்தார், இந்நாளை சூரிய ஜெயந்தி என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.