அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்க நின்ற சிறுவர்கள் திமுகவுக்கு ஆதராக ஓட்டு கேட்டதால் சலசலப்பு

சிவகாசி: சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்க நின்ற சிறுவர்கள் திமுகவுக்கு ஆதராக ஓட்டு கேட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அப்பகுதி சேர்ந்த சிறுவர்கள் சிலர் வரவேற்றனர்.

அப்போது கொட்டடித்த சிறுவர்கள், ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பாடியதால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதில், அந்தந்த பகுதி பிரச்சினைகளை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கான தீர்வை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதி மொழி அளித்து வருகிறார். இதற்க்கு தமிழக மக்களிடம் பலத்த வரவேற்பு உள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவினர் செல்லும் இடம் எல்லாம் எது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: