காளையார்கோவில்: குலதெய்வ கோயிலில் 108 கிடா வெட்டி விருந்து வைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அளித்த பேட்டியில், கத்தியை காட்டி அன்று கொள்ளையடித்ததாகவும், கட்டையை போட்டு இன்று கொள்ளை அடிப்பதாகவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடிகரை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான வீரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கு அவரது மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடைபெற்றது. இதையொட்டி 108 கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.