புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளைத் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் நிதி ஆண்டில் முதல்கட்டமாக நான்கு வங்கிகள் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்காக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகராஷ்டிரா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.