தண்டையார்பேட்டை: பெங்களூருவில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ரூ.4.75 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த இருவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.4,75 கோடி மோசடி நடைபெற்றதாக, அதன் நிர்வாகிகள் பெங்களூரு காவல் துறையில் புகார் அளித்தனர். போலீசார் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தனர். சிபிஐ நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய இருவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், பெங்களூருவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள், தண்டையார்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் (32), ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவை சேர்ந்த முகமது ரபிக் (30) ஆகிய இருவரை கைது செய்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரிக்க நேற்று பெங்களூரு அழைத்து சென்றனர்.